நாடெங்கிலும் 31.10.2016 முதல் 05.11.2016 வரை பொது வாழ்வில் தூய்மை மற்றும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க வலியுறுத்தி, இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி, அனுசரிக்கப்பட்டு வரும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் ஊழியர்களிடையே விழிப்புணர்வு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், சேலம் ரயில்வே கோட்ட கூடுதல்மேலாளர் சந்திரபால் ஊழியர்களுக்கு கண்காணிப்பு உறுதிமொழி செய்து வைத்தார். சேலம் கோட்ட முதுநிலை மின்பொறியாளர் பிரபாகரன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சேலம் தமிழக அரசு காவல் துறை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஏற்காடு மான்ட்போர்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜே. ஜார்ஜ் பேசுகையில் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதில் மட்டுமன்றி, தங்களது அன்றாட பணிகளையும் ஊழல் கறை இன்றி தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்று கூறினார். தெற்கு ரயில்வே தலைமையக துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி காயத்ரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் விஜுவின் நன்றியுரை வழங்கினார்.


நிகழ்ச்சியில் சேலம் தமிழக அரசு காவல் துறை கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் துணைக் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஏற்காடு மான்ட்போர்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.ஜே. ஜார்ஜ் பேசுகையில் ரயில்வே ஊழியர்கள் ரயில்வே சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதில் மட்டுமன்றி, தங்களது அன்றாட பணிகளையும் ஊழல் கறை இன்றி தூய்மையாக வைத்திருப்பது அவசியம் என்று கூறினார். தெற்கு ரயில்வே தலைமையக துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி காயத்ரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். சேலம் கோட்ட ஒருங்கிணைப்பு வணிக மேலாளர் விஜுவின் நன்றியுரை வழங்கினார்.
