தாய்ப்பால் கொடுப்பது மதத்திற்கு எதிரானது- அடம்பிடித்த கேரளா இளைஞர் மீது போலீசில் புகார்!

திருவனந்தபுரம்: கேரளாவில் இஸ்லாமியர் ஒருவர் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவிடாமல் தடுத்ததுடன் அது தனது மதத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார்.

கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டை சேர்ந்தவர் அபூபக்கர். இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த அவரது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு குழந்தை பிறந்தவுடன் மருத்துவர்கள் அதற்கு தாய்ப்பால் கொடுக்குமாறு அபூபக்கரின் மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.

அதற்கு அபூபக்கரோ தாய்ப்பால் எல்லாம் கொடுக்கவிட மாட்டேன். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என் மதத்திற்கு எதிரானது. மெக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட நீரும், தேனும் கொடுத்தால் போதுமானது என்று இஸ்லாமிய போதகர் ஒருவர் என்னிடம் தெரிவித்துள்ளார் என்று அவர் மருத்துவர்களுடன் விவாதம் செய்தார்.

மேலும் தனது முதல் குழந்தைகக்கு தாய்ப்பால் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்க விட மாட்டேன் என்று கூறி மனைவி மற்றும் பிறந்த குழந்தையை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். ஐந்து நேர பாங்கு கூறிய பிறகு வேண்டுமானால் தாய்ப்பால் கொடுக்கலாம் என இஸ்லாமிய போதகர் தெரிவித்தாராம்.

இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் ஒரு குழந்தையின் உரிமையை மறுக்கும் அபூபக்கர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...