பெண்களை பன்றிகள் என்பவர் நமக்கு அதிபராக வேண்டாம்: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்

வாஷிங்டன்: நமக்கு நல்ல அதிபர் வர வேண்டும். பெண்களை பன்றிகள் என்று சொல்பவர் அல்ல என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா டிரம்ப் பற்றி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப் மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் டெம்பியில் நடந்த பேரணியில் கலந்து கொண்ட ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஹில்லாரி கிளிண்டன் கூறுகையில், டிரம்ப் அதிபராகிவிட்டார் என்று கற்பனை செய்யுங்கள். அவர் அதிபராகி உங்கள் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் ட்விட்டர் போருக்கு பதிலாக உண்மையான போரையே துவங்குவார் என்றார்.

டிரம்ப் பெண்களை அவமதிப்பவர் என்று தொடர்ந்து கூறி வருகிறார் ஹில்லாரி. இந்நிலையில் வடக்கு கரோலினாவில் உள்ள ராலேவில் நடந்த பேரணியில் பேசிய ஒபாமா கூறுகையில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஏமாற்றுபவர் அதிபர் மாளிகைக்கு வர தகுதியில்லாதவர். அமெரிக்கா மக்களை கொடுமைப்படுத்த வேண்டும் என்று யோசனை சொல்பவர் அதிபர் ஆகக் கூடாது.

பிரபலமாக இருக்கும் காரணத்தால் பாலியல் தொல்லைகள் கொடுத்துவிட்டு தப்பிப்பவரின் குரலை கேட்க விரும்புகிறீர்களா? பெண்களை பன்றிகள், நாய்கள் என்று யார் கூறுவார்கள்? அந்த குரல் அமெரிக்காவில் குரல் அல்ல. அமெரிக்காவுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் ஹில்லாரி. அவர் தான் அடுத்த அதிபராக வேண்டும். அவர் தான் சரியான நபர் என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...