பறவை காய்ச்சல் பரவலை தடுப்பது தொடர்பாக ஆட்சியர், கால்நடைதுறை, சுகாதார துறை அதிகாரிகள் ஆலோசனை


கேரளாவில் பறவை காய்ச்சல் பரவிவரும் நிலையில் கோவையில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நோய் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோயானது வேகமாக பரவி வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சலானது பரவி விடாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக தமிழக கேரள எல்லையோரம் இருக்கும் மாவட்டங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று மாலை முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஹரிகரன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கால்நடைபராமரிப்பு துறை, சுகாதார துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோருடன் கோழி பண்ணை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கேரளாவில் இருந்து வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் போன்றவை ஏற்றி வரும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் 12 வழித்தடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள் 36 குழுக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மறு உத்திரவு வரும் வரை தொடந்து ஈடுபடவும் ஆட்சியர் ஹரிகரன் அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.மேலும் நோய் கிளர்ச்சி ஏற்பட்டால் அதை உடனடியாக கட்டுப்படுத்தும் பொருட்டு தேவையான மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்திரவிட்ட ஆட்சியர், நோய் தடுப்பிற்காக பயிற்சி அளிக்கப்பட்ட 40 அதிரடி குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...