மத்திய அரசின் மலிவு விலை மருந்துக் கடை- மக்கள் மகிழ்ச்சி


மத்திய அரசின் ''ஜன் அவுஷதி'' திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள மலிவு விலை மருந்துக் கடைகளினால் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதைத் தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

மக்கள் அதிகம் உபயோகிக்கக் கூடிய மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட அத்யாவசிய முக்கிய மருந்துகளின் விலையில் கட்டுப்பாட்டினைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் முதற்கட்டமாக 25 பகுதிகளில் ஜன் அவுஷதி மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. 



இந்த மருந்துக் கடைகளில் சுமார் 400, 500 ரூபாய்க்கு தனியார் அல்லது வெளிக்கடைகளில் வாங்கப்படும் மருந்துகள் இந்த ஜன் அவுஷத் மருந்தகத்தில் வெறும் 40 முதல் 50 ரூபாய்க்கே கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 



இத்திட்டத்தின் கீழ் கோவை இராமநாதபுரம் பகுதியில் திறக்கப்பட்டுள்ள மருந்தகத்தின் உரிமையாளர் கூறுகையில், ''தனியார் மருந்துக் கடைகளில் மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இனி மக்களுக்கு இல்லை. மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். பொதுமக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...