டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் மாநகராட்சி வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவிவரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநகராட்சியின் சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி 79வது வார்டுக்கு உட்பட்ட தடாகம் சாலை, இராயப்பபுரம் தெருவில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று அபேட் மற்றும் குளோரின் மருந்தை தண்ணீர் தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையற்றப் பொருட்களை அகற்றுவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.



இதனைத்தொடர்ந்து, லாலி சாலையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டார். பின், பொன்னைய்யாராஜபுரம், ஏ.கே.எஸ்.நகர் பகுதியில் வீடுகளுக்கு செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதை விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள முத்தண்ணன் குளத்தை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார். மேலும், தெலுங்கு வீதியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாரியம் நடைபெற்று வரும் இடத்தினையும் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வுகளின் போது மாநகராட்சி நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...