பழங்குடியினரின் இடத்தை ஆக்கிரமித்த ஈஷா- உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் இயக்கத்தினர் கைது



கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 44 ஏக்கர் நிலங்களை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக் கோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1971ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கோவை முட்டத்துவயல் பகுதியில் முத்துச்சாமி (அ) அமெரிக்க கவுண்டர் என்பவரால் பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 44 ஏக்கர் நிலம் பட்டா செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.



இதைத்தொடர்ந்து, ஈஷா அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் குடியேறும் போராட்டம் வெள்ளியன்று (இன்று) நடைபெற்றது.



கோவை இருட்டுப்பள்ளம் பகுதியில் இருந்து பேரணியாக வந்த அவ்வமைப்பினரை செம்மேடு பகுதியின் முன்பாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து, தமிழ்புலிகள் அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் முகிலரசன் கூறுகையில், முதற்கட்டமாக குடியேறும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி ஈஷா அமைத்துள்ள வேலிகளை பிடுங்கி எறியும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ்புலிகள் அமைப்பினர் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...