கோவையில் தொடரும் யானைகள் மரணம்- அதிர்ச்சியில் வன ஆர்வலர்கள்


கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியானது நீர்நிலைகள் நிறைந்த, அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு, யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. 

இந்நிலையில், வியாழனன்று அப்பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் இறந்துள்ள யானைக்கு சுமார் ஒரு வயது மட்டுமே இருக்கும் என்றும், யானைக் கூட்டத்திற்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் இறந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இருப்பினும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உண்மைத் தகவல் தெரியவரும் என்றனர்.



கடந்த அக்டோபர் 30ம் தேதியன்று இப்பகுதியின் அருகாமையில் கைவிடப்பட்ட ஒரு குட்டி யானை மீட்கப்பட்டு முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு அந்த யானை உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு குட்டி யானை உயிரிழந்திருப்பது வனத்துறை அதிகாரிகள் மற்றும் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...