வால்பாறை குடியிருப்பு பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் மக்கள் அச்சம்

வால்பாறை பகுதியில் சில மாதங்களாக மழையின்றி வறட்சி ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு வாரகாலமாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் அடர்ந்த வனப்பகுதியில் வறட்சி நிலை இன்னும் சீராகாததால் யானைக் கூட்டம் உணவு மற்றும் தண்ணீருக்காக பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் புகுந்து சேதம் செய்து வருகின்றது. 

இந்நிலையில், வால்பாறைக்கு உட்பட்ட காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் புகுந்த காட்டு யானைக் கூட்டம் அப்பகுதியில் இருந்த ரேஷன் கடையின் கதவு மற்றும் ஜன்னல்களை உடைத்து அரிசி மூட்டையை இழுத்து சேதம் செய்ததுடன் அப்பகுதியிலேயே தற்போது முகாமிட்டுள்ளது. 



அதேப்போல், கருமலை எஸ்டேட் பகுதியில் தேயிலைத் தோட்ட மேலாளரான தில்லை என்பவரின் வீட்டின் கதவை காட்டு யானை ஒன்று உடைத்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்தக் காட்டுயானையை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். 

மேலும், பன்னிமேடு, வாகமலை, சோலையார், அக்காமலை, சிறுகுன்றா உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அக்காமலை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் தேயிலைத் தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்கும் பணி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...