ஓய்வூதியம் கோரி கட்டிடத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் அமைப்புசாரா கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் கேட்டு திருச்சி சாலையிலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்திருந்த 60 வயது நிறைவடைந்த கட்டுமான தொழிலாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அவர்களின் மனுவை மறு பரிசீலனை செய்யக் கோரியும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 



இதில், கட்டிட தொழிலாளர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நலவாரிய அதிகாரியிடம் அளித்தனர். மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதியளிக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...