கோவையில் அமைப்புசாரா கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் கேட்டு திருச்சி சாலையிலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்திருந்த 60 வயது நிறைவடைந்த கட்டுமான தொழிலாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அவர்களின் மனுவை மறு பரிசீலனை செய்யக் கோரியும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், கட்டிட தொழிலாளர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நலவாரிய அதிகாரியிடம் அளித்தனர். மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதியளிக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்திருந்த 60 வயது நிறைவடைந்த கட்டுமான தொழிலாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அவர்களின் மனுவை மறு பரிசீலனை செய்யக் கோரியும் தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில், கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில், கட்டிட தொழிலாளர்கள் வாயில் கறுப்புத் துணி கட்டி நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை நலவாரிய அதிகாரியிடம் அளித்தனர். மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் உறுதியளிக்கும்வரை இந்தப் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.