வானிலை மாற்றத்தின் காரணமாக கோவை மாவட்டத்தில் பெய்ய வேண்டிய தென் மேற்கு பருவ மழை பொய்த்து வறட்சியின் பிடியில் கோவை சிக்கியுள்ளது. இந்நிலையில், தற்போது பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழையும் தற்போதுவரை சரிவர பெய்யத் துவங்காததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வருத்தமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக சற்று மழை பெய்த நிலையில் நேற்றைய நிலவரப்படி எந்தப் பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தொடர்ச்சியான மழை இல்லாததால் நீர் தேக்கங்களில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.