பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க மாநகராட்சி ''மை ஷாப்பிங் மை பேக்'' திட்டம் அறிமுகம்.


கோவை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் ''மை ஷாப்பிங் மை பேக்' என்ற புதிய அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முழுக் குறிக்கோள் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே ஆகும்.

கோவை மாநகராட்சி, சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர் அமைப்புகள் ஆகியோர் இணைந்து துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு மக்களிடம் பிளாஸ்டிக் பைகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. மேலும், எவ்வாறு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கலாம் என்பதை விவாதிக்கும் வகையில் ஒரு வாட்ஸ்அப் குழுவும் துவங்கப்பட்டுள்ளது. 

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் எல்.டிம்பில் தலைமையில் துவங்கப்பட்டுள்ள இந்த வாட்ஸ்அப் குழுவில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவது, அதனால் ஏற்படும் நன்மைகள், நோக்கம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும். 



இதுகுறித்து சித்ரா ரவீந்திரன் கூறுகையில், பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைக் குறைக்க முதற்கட்டமாக வணிக நிறுவன உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வீட்டில் இருந்தே பைகளை எடுத்து வர உரிமையாளர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு அனைத்து நிறுவன உரிமையாளர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றார்.

பி.கவிதா கூறுகையில், குடியிருப்பு பகுதியில் உள்ள தையலகக் கடைக்காரர்கள் இதற்கு ஆதரவளிக்க வேண்டும். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணியினால் பைகளை செய்து விநியோகிக்க வேண்டும் என்றார்.

பிளாஸ்டிக் பயன்பாட்டினை ஒழிக்கும் இத்திட்டத்திற்கு கிருஷ்ணா கல்லூரி மாணவர்களும் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். அக்கல்லூரி மாணவர்களே துணியினால் தயாரிக்கப்பட்ட பையினை கடைகளுக்கு விநியோகித்து வருகின்றனர்.

மை ஷாப்பிங் மை பேக் அமைப்பின் சார்பில் அனைத்து வணிக வளாகங்களிலும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இதனை பின்தொடரும் வணிக நிறுவனம் குறித்து புள்ளிவிவரம் சேகரிக்கவும் அதனை மாநகராட்சியிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் குறைந்தளவு நூறு நிறுவனத்திலாவது பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் தவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும், கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தன்னார்வலர் அமைப்பிலிருந்து மொத்தம் 10 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மை ஷாப்பிங் மை பேக் அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு பகுதியிலும் இதுகுறித்தான விழிப்புணர்வில் ஈடுபடுவர். இதுகுறித்து மேலும் தகவலுக்கு 94433 44731 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...