தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் உபைதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் சர்மிளா பேசுகையில்; இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைபடுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது ஆட்சி செய்யக்கூடிய மத்திய அரசு முஸ்லீம்கள் பின்பற்றும் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதை தடுத்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி முஸ்லீம் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போர் என அவர் தெரிவித்தார்.
இதில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் நஷீமா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில பொதுச் செயலாளர் பர்ஜானா மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
