விடிய விடிய யானைகளை விரட்டிய மரப்பாலம் ஊர் மக்கள்


கோவையில் மீண்டும் விவசாயி நிலத்திற்கு புகுந்த ஒற்றை காட்டு யானை மயில்சாமி என்ற விவசாயி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்றது. விவசாயிகளே யானையை விரட்டியடித்ததால் மீண்டும் யானை வந்து விடுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் விழித்திருந்த நிலை ஏற்பட்டது.

கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மரம்பாலம் பகுதியில் நேற்று இரவு மயில்சாமி என்பவரின் விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்து அங்கு பயிறிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை மேயத்தொடக்கி உள்ளது. இதை அடுத்து அவரது வீட்டின் முன் புரத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில்  தண்ணீரை குடித்து விட்டு அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, வெங்காயம், பருப்பு அனைத்து பொருட்களை சாப்பிட்டு உள்ளது. இதை அடுத்து அருகே உள்ள தோட்ட உரிமையாளர் தீ பந்தத்தை காட்டி யானை விரட்டினார், இதை அடுத்து அருகே இருந்த புதரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்ததால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர், ஆனால் வனத்துறையினர் வராததால் விவசாயிகளே பட்டாசு வெடித்து வனத்திற்குள் விரட்டினர், மீண்டும் வருமே என்ற அச்சத்தில் தூங்காமல் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...