கோவையில் மீண்டும் விவசாயி நிலத்திற்கு புகுந்த ஒற்றை காட்டு யானை மயில்சாமி என்ற விவசாயி வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்றது. விவசாயிகளே யானையை விரட்டியடித்ததால் மீண்டும் யானை வந்து விடுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் விழித்திருந்த நிலை ஏற்பட்டது.
கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மரம்பாலம் பகுதியில் நேற்று இரவு மயில்சாமி என்பவரின் விவசாய நிலத்திற்கு ஒற்றை காட்டு யானை ஒன்று புகுந்து அங்கு பயிறிடப்பட்டிருந்த சோளப்பயிர்களை மேயத்தொடக்கி உள்ளது. இதை அடுத்து அவரது வீட்டின் முன் புரத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்து விட்டு அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த அரிசி, வெங்காயம், பருப்பு அனைத்து பொருட்களை சாப்பிட்டு உள்ளது. இதை அடுத்து அருகே உள்ள தோட்ட உரிமையாளர் தீ பந்தத்தை காட்டி யானை விரட்டினார், இதை அடுத்து அருகே இருந்த புதரில் 2 மணி நேரத்திற்கும் மேலாக நின்று கொண்டிருந்ததால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர், ஆனால் வனத்துறையினர் வராததால் விவசாயிகளே பட்டாசு வெடித்து வனத்திற்குள் விரட்டினர், மீண்டும் வருமே என்ற அச்சத்தில் தூங்காமல் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.