நாட்டில் வேறு விவகாரங்கள் இல்லாததால் முன்னாள் இராணுவத்தினர் விவகாரத்தை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்வதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் குற்றம்சாட்டியுள்ளார்

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமானம் மூலம் வருகை தந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.கவினர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியளர்களிடம் பேசிய அவர் கோவையில் கல்வி தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருப்பதாகவும் சென்னையிலும் ஓரு நிகழ்வில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவருக்கும் தரமான கல்வி என்பதே பா.ஜ.க வின் கொள்கை எனக்கூறிய அவர் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது தொடர்பாக தமிழக கல்விதுறை உள்ளிட்ட அனைத்து மாநில கல்வி துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஓரே பதவி ஓரே ஒய்வூதியம் என்ற முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கையை  40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நிராகரித்தாக குற்றம்சாட்டிய அவர் ஆனால் பா.ஜ.க அரசு இந்த திட்டதிற்கு 6500 கோடி ஓதுக்கி இருப்பதாகவும் கூறினார். நாட்டில் வேறு விவகாரங்களை எழுப்ப முடியாது என்பதால் இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...