கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமானம் மூலம் வருகை தந்தார். அங்கு அவருக்கு பா.ஜ.கவினர் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியளர்களிடம் பேசிய அவர் கோவையில் கல்வி தொடர்பாக நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருப்பதாகவும் சென்னையிலும் ஓரு நிகழ்வில் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார். அனைவருக்கும் தரமான கல்வி என்பதே பா.ஜ.க வின் கொள்கை எனக்கூறிய அவர் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது தொடர்பாக தமிழக கல்விதுறை உள்ளிட்ட அனைத்து மாநில கல்வி துறை அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஓரே பதவி ஓரே ஒய்வூதியம் என்ற முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கையை 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நிராகரித்தாக குற்றம்சாட்டிய அவர் ஆனால் பா.ஜ.க அரசு இந்த திட்டதிற்கு 6500 கோடி ஓதுக்கி இருப்பதாகவும் கூறினார். நாட்டில் வேறு விவகாரங்களை எழுப்ப முடியாது என்பதால் இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.
ஓரே பதவி ஓரே ஒய்வூதியம் என்ற முன்னாள் இராணுவத்தினரின் கோரிக்கையை 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நிராகரித்தாக குற்றம்சாட்டிய அவர் ஆனால் பா.ஜ.க அரசு இந்த திட்டதிற்கு 6500 கோடி ஓதுக்கி இருப்பதாகவும் கூறினார். நாட்டில் வேறு விவகாரங்களை எழுப்ப முடியாது என்பதால் இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகவும் ஜவடேகர் குற்றம்சாட்டினார்.