‛‛ பயங்கரவாதிகளுக்கு சாதகமாக நிகழ்ச்சிகளை வெளியிட்ட ‛டிவி' சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டது ஏற்கனவே நடந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். சென்னையில் அவர் கூறியதாவது: என்டி‛டிவி' சேனலின் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது புதிய விஷயம் அல்ல. இதற்கு முன், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பல ‛டிவி' சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு சாதகமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று அந்த ஆட்சியில் பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது ஏற்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் தான் என்டி ‛டிவி' சேனல் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கைகளை ஒளிபரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்டி ‛டிவி சேனல் பல விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு சாதகமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று அந்த ஆட்சியில் பல முறை வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்போது ஏற்படுத்தப்பட்ட விதிகளின் அடிப்படையில் தான் என்டி ‛டிவி' சேனல் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கைகளை ஒளிபரப்புவதை ஏற்றுக் கொள்ள முடியாது. என்டி ‛டிவி சேனல் பல விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளது.