கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பெருமாள் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மதுபான கூடம் ஓன்றில் மது அருந்திக்கொண்டு இருந்த இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பெருமாள் மற்றும் சீனிவாசன் என்பவர்களை மற்றொரு குழுவை சேர்ந்த நாகேந்திரன், வீரன், விஜி, மணி, சந்தோஷ்,ராஜன்,செந்தில் ஆகிய ஏழு பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.அப்போது அவர்கள் பெருமாளையும் சீனிவாசனையும் கத்தியால் குத்தியதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.சீனிவாசன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த வழக்கில் 7 பேரையும் துடியலூர் போலிசார் கைது செய்தனர்.இந்த வழக்கு கோவை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் செந்தில், மணி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாததால் அவர்கள் இருவரையும் விடுவித்த நீதிபதி கார்த்திகேயன், மற்ற 5 பேரான நகேந்திரன்,விஜி,வீரன்,ராஜன், சந்தோஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்திரவிட்டார்.கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மதுபான கூடம் ஓன்றில் மது அருந்திக்கொண்டு இருந்த இரு குழுவினரிடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் பெருமாள் மற்றும் சீனிவாசன் என்பவர்களை மற்றொரு குழுவை சேர்ந்த நாகேந்திரன், வீரன், விஜி, மணி, சந்தோஷ்,ராஜன்,செந்தில் ஆகிய ஏழு பேர் தாக்கியதாக கூறப்படுகிறது.அப்போது அவர்கள் பெருமாளையும் சீனிவாசனையும் கத்தியால் குத்தியதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.சீனிவாசன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த வழக்கில் 7 பேரையும் துடியலூர் போலிசார் கைது செய்தனர்.இந்த வழக்கு கோவை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரில் செந்தில், மணி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாததால் அவர்கள் இருவரையும் விடுவித்த நீதிபதி கார்த்திகேயன், மற்ற 5 பேரான நகேந்திரன்,விஜி,வீரன்,ராஜன், சந்தோஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்திரவிட்டார்.கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியது.