கோவை: சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவிகளுக்கான "சாரதா மையம்" திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில், மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய மையத்தினை திறந்து வைத்தார். குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் விழாவிற்கு தலைமை ஏற்றார்.

இராமகிருஷ்ண பரமஹன்சரின் துணைவியாரும், பெண்களுக்கு முன்மாதிரியுமான அன்னை ஸ்ரீ சாராத தேவி அவர்களுக்கு இந்த மையம் அர்பணிக்கப்படுகின்றது. சாராத மையம் ஐம்பது ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இம்மையம் உள்விளையாட்டுக்கான வசதிகள், தொலைக்காட்சிகள், கணினி மையம், வாசிப்பு அறைகள் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில், சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கு கூடமும், நாள் ஒன்றுக்கு நான்கு ஆயிரம் பேருக்கு சமைப்பதற்கான அதி நவீன வசதிகள் கொண்ட சமையல் கூடம் போன்றவை உள்ளது.

இந்த திறப்பு விழாவில், கல்லூரியின் நிருபர் பாலசுப்ரமணியம், துணை நிருபர் சங்கர் வாணவராயர், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இராமகிருஷ்ண பரமஹன்சரின் துணைவியாரும், பெண்களுக்கு முன்மாதிரியுமான அன்னை ஸ்ரீ சாராத தேவி அவர்களுக்கு இந்த மையம் அர்பணிக்கப்படுகின்றது. சாராத மையம் ஐம்பது ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய இம்மையம் உள்விளையாட்டுக்கான வசதிகள், தொலைக்காட்சிகள், கணினி மையம், வாசிப்பு அறைகள் என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில், சுமார் ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணும் வகையில் அமைக்கப்பட்டுள்ள உணவுக்கு கூடமும், நாள் ஒன்றுக்கு நான்கு ஆயிரம் பேருக்கு சமைப்பதற்கான அதி நவீன வசதிகள் கொண்ட சமையல் கூடம் போன்றவை உள்ளது.

இந்த திறப்பு விழாவில், கல்லூரியின் நிருபர் பாலசுப்ரமணியம், துணை நிருபர் சங்கர் வாணவராயர், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.