தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 'எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம்' பிரச்சாரம் ஆலோசனைக் கூட்டம் .

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் எங்கள் தேசம் எல்லோருக்குமான தேசம் பிரச்சாரம் நவம்பர் 7 ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்த நாளையொட்டி நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவை தாமஸ் கிளப்பில் நடைபெற்றது.  
 

இந்தியாவில் தற்போது மதம் மற்றும் சாதியங்கள் தலைதூக்கி உள்ளது.  இதை முறியடிக்கும் வகையில் இந்தியாவின் பன்முகத் தன்மையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் வகையிலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நவம்பர் 7ம் தேதி சர்.சி.வி.ராமன் பிறந்தநாளை யொட்டி 'எங்கள் தேசம்' என்ற கோஷத்தோடு நாடு முழுவதும பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது. 

இப்பிரச்சார இயக்கத்தில் வரலாற்று ஆய்வு மாநாடுகள் அறிவியலின் வரலாற்று நிகழ்வுகள், உலகம் மற்றம் மனிதம் தோன்றிய வரலாறுகள், தெருமுனை பிரச்சாரங்கள் மாணவர்களுக்கான கட்டுரை/ ஓவிய போட்டிகள் நடைபெறவுள்ளது.  இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் நவம்பர் 7ம்தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, நவ. 19ம் தேதி ஆசிரியர்கள் அறிவியல் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்திற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெ.நடராஜன் தலைமை விகித்தார்.  மாநில தலைவர் பேராசிரியர் மேகலா, மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது பாதுஷா, மாவட்ட செயலாளர் ஆர்.கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இப்பிரச்சார் இயக்கம் 2017ம் ஆண்டு நவம்பர் வரை ஓராண்டு காலம் நடத்தப்படும் என அலோசனையில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...