நொய்யல் நதியின் முன்னாள் தோற்றத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச்சென்ற பக்தி நிகேதன் நாட்டிய அமைப்பினர்


கொங்கு மண்டலத்தின் நீராதாரமாகவும், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள விலங்குகளின் வாழ்வாதாரமாகவும் திகழ்ந்தது நொய்யல் நதி பல்வேறு விதமான உயிரினங்களின் நீர்த்தேவையினை ஒரு காலத்தில் நொய்யல் பூர்த்தி செய்து வந்தது. ஆனால், மனிதர்களின் வளர்ச்சி மற்றும் சரியான பராமறிப்பின்மையால் நொய்யல் நதி தற்போது வழித்தடமாக மாறியுள்ளது. இதனை மீண்டும் மீட்டெடுத்து நொய்யல் நதியை செழிப்படையச் செய்ய வேண்டும் என பல தன்னார்வலர்களும், சமூக ஆர்வலர்களும் முயற்சித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக பக்தி நாட்டிய நிகேதன் என்னும் நாடக அமைப்பின் சார்பில் நொய்யல் நதி குறித்தான ஒரு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனை அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கருணசாகரி ஏற்பாடு செய்திருந்தார். 



இந்த நாடக நிகழ்வின் போது அந்த அமைப்பின் நடனக் குழுவினர் நொய்யலின் கடந்தகாலத் தோற்றத்தினை அப்படியே நடனமாக வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர்.

ஆறுகள் தான் தண்ணீரின் அடிப்படை ஆதாரமாக உள்ளது. ஆனால், மக்கள் வசிக்கும் பகுதியில் குழாய்களில் நீர் வருவதினால் மக்களுக்கு நதிகள் அழிந்துவருவது குறித்து சிறிதும் கவலையில்லை. அதுவும் ஒருகட்டத்தில் வற்றிவிடும். அப்போது, நீரின் ஆதாரமான ஆறுகள் குறித்து நாம் கவலையடைவோம்.

பல்வேறு ஆண்டுகலாக கோவை மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள் நொய்யலால் பயனடைந்து வந்தன. நாம் அதனை அழித்ததன் தொடர்ச்சி அதனால் பயனடைந்து வந்த விவசாயம் மாய்ந்துபோனது. அதனை நம்பி இருந்த பல உயிரினங்கள் இடம்பெயர்ந்தன.

அழிவின் பாதையில் இருந்து இயற்கையையும், நம்மையும் பாதுகாக்க நொய்யலை மீட்டெடுப்பது அவசியம் என்ற கருத்தினை மையமாகக் கொண்டு பக்தி நாட்டிய நிகேதன் அமைப்பினர் நடனம் நிகழ்த்தினர். நடனக் கலைஞர்களின் சிறப்பான நடனம் பார்வையாளர்களை நொய்யலின் முந்தைய காலத்திற்கே அழைத்துச் சென்றதாக அமைந்தது. கலைஞர்கள் தங்கள் நடனத்திறன் மூலம் நொய்யலை திரும்பப் பெறுவது, அதை நாம் இன்னும் பொறுப்புடனும், சூழலியல் நட்புடனும் பாதுகாப்பது என்று வலியுறுத்தினர்.





























Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...