தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரையில் துவங்கவுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரித முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை நீர் வடிகால் அமைப்பு, குளங்கள், நீர்த்தேக்கம் உள்ளிட்டவை கனமழையின் காரணமாக வெள்ளம் பாதிக்காதவாறு துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வடிகால் துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத் துறை, கால்நடைத் துறை உள்ளிட்ட பிரிவுகளின் சார்பிலும் வடகிழக்கு பருவமழை அவசரக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், அம்மாவட்டத்திற்கு உட்பட்ட வெள்ளம் பாதிப்புகள் ஏற்படக் கூடிய சில பகுதிகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். குன்னூர்க்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட ஆட்சியர் அப்பகுதியில் இருந்த ஒரு பெட்டிக் கடை வியாபாரியிடம், அவரது வியாபாரம் குறித்து விசாரித்தார்.
இந்நிகழ்வின் போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் பொ.சங்கருடன் குன்னூர் ஆர்.டி.ஓ கீதாபிரியா, தாசில்தார் ஜான் மனோகர், குன்னூர் வருவாய் ஆய்வாளர் வசந்த் மற்றும் பலர் இருந்தனர்.