தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன்? - ஜி.கே.வாசன்


தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் என்று கேள்வியெழுப்பியுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,



''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கிறது, கர்நாடக அரசும் தண்ணீர் திறந்துவிட தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் மற்றும் மானாவரி நிலத்திற்கு சேத அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஆக்கப்பூர்வமான முடிவு எட்டப்படாதது வருத்தமளிக்கிறது. கச்சத்தீவை கைப்பற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதேப்போல், சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தர தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதை தடுக்க உள்ளாட்சி அமைப்புகளை காவல்துறையினர் உதவியுடன் கண்காணிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு தமிழக அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசு சட்டமன்ற நிலைக்குழுக்களை அமைப்பதில் தாமதம் காட்டுவது ஏன் ?. எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள காரணத்தால் தான் தாமதிக்கிறதா என விளக்கமளிக்க வேண்டும்'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...