தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுங்கள்: 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று டெல்லி உள்பட 5 மாநிலங்களுக்கு மத்திய சுற்றுப் புறச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் மண்டலத்தில், டெல்லி, உத்தரப்பிரதேசம், அரியானா, ராஜஸ் தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் அடங்கும். அண் மைக் காலமாக என்சிஆர் பகுதியில் காற்று அதிகமாக மாசு அடைந்து வருகிறது. இதற்கு, அரியானா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் உள்ள அனல் ஆலைகளிலிருந்து வெளிவரும் சாம்பல், பயிர்கள் தீயில் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும். இதனால் அந்த பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் உள்ளன. இதனால் அவர்களுக்கு உடல் நலம் பாதிக்கிறது.

இதே நிலை நீடித்தால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. டெல்லி, அரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் சுற்றுப்புறச்சூழல் அமைச்சர்களுடனான சந்திப்பை நேற்று முன்தினம் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் நடத்தியது. அந்த கூட்டத்தில், என்சிஆர் பகுதியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க 5 மாநில அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பயிர்களை எரிப்பது, மாசு ஏற்படுத்தும் செங்கல் ஆலைகளை மூடுதல், அனல் ஆலைகளிலிருந்து சாம்பல் வெளியேறுவதை கட்டுப்படுத்துதல் மற்றும் சாலைகளில் தூசி பிரச்சினையை திறம்படகையாளுதல் போன்ற நடவடிக்கைகளை 5 மாநிலங்களும் மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டன.

காற்று மாசுவை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, சுற்றுப்புறச்சூழலுக்கு கேடு ஏற்படாத வகையில் ஆலைகளை இயக்குமாறு என்டிபிசிக்கு விரைவில் கடிதம் எழுதபோவதாக கெஜ்ரிவால் அரசு தெரிவித்தது. மேலும், காற்று மாசினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தும் படி மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மத்திய அமைச்சகம் உத்தரவிட்டது. மேலும், ஒவ்வொரு காலாண்டும் காற்று மாசுவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம் ஆய்வு செய்யும் என்றும் தெரிவித்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...