அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் : மேடை முன் துப்பாக்கியுடன் மர்ம நபர் இருந்ததால் பரபரப்பு

பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை பாதுகாவலர்கள் பாதுகாப்பாக கூட்டத்திலிருந்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்த போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் முன் மர்ம நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்டார். இதனை கவனித்த பாதுகாவலர்கள் அதிரடியாக செயல்பட்டு மர்ம நபரை தூக்கிச் சென்றனர். பாதுகாப்பை உறுதிப்படுத்த டிரம்பையும் மேடைக்கு பின்புறம் அழைத்து சென்றனர். 



இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர் வெளியேற்றப்பட்ட பிறகு பிரச்சார மேடைக்கு திரும்பிய டிரம்ப், எந்தவிதமான மிரட்டலுக்கும் தாம் அடிபணிய போவதில்லை என்றார். தமது பயணம் திட்டமிட்டப்படி தொடரும் என்றார். மேலும் பேசிய அவர் எங்களுக்கு வெற்றி எளிதாக கிடைத்துவிடும் என யாரும் கூற முடியாது என்றார். எனது பயணத்தை யாராலும் தடுக்க முடியாது என்றார். நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...