என்டிடிவியை தொடர்ந்து மேலும் 2 சேனல்களுக்கு தடை

புதுடெல்லி: என்டிடிவி இந்தி சேனலுக்கு ஒரு நாள் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. பதன்கோட் தாக்குதலை ஒளிபரப்பிய என்டிடிவி இந்தி சேனலுக்கு நவம்பர் 9ம் தேதி ஒரு நாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தேசிய நலனை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இரண்டாவது எமர்ஜென்சியை போல பிரதமர் மோடியின் ஆட்சி உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழலில் என்டிடிவியை தொடர்ந்து மேலும் இரண்டு சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அசாமில் உள்ள நியூஸ் டைம் அசாம் என்ற சேனலுக்கும், கேர்வேர்ல்டு டிவி என்ற சேனலுக்கும் அதே 9ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை ஒருநாள் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆணையை கடந்த 2ம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...