ரூ.9.15 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்ட மாநகராட்சி - ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் அளவிலான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், 

''கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், முதற்கட்டமாக ஞாயிறன்று (இன்று) வரை மாநகராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் பொது ஒதுக்கீடு இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வார்டு 6-ல் கவுண்டம்பாளையம், ராமகிருஷ்ணா நகரில் விளையாட்டு மைதானமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 29 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு 51-ல் காந்திபுரம், 100-அடி சாலை, 8-வது தெருவில் சிவா கார்ஸ் என்னும் பழைய நான்கு சக்கர வாகனம் விற்கும் இடமாக உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 2 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டன.



இதேபோன்று, கிழக்கு மண்டலம், வார்டு 36-ல் காளப்பட்டி, சிவா நகரில் கோவில் நிளமாக ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.95 லட்சம் மதிப்பிலான 14.5 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், வார்டு 28-ல் சரவணம்பட்டி, சங்கரா நகரில் குடிசைகள் அமைத்து ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான 31 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டது.





இதனைத்தொடர்ந்து, தெற்கு மண்டலம், வார்டு 91-ல் காயத்திரி நகரில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.4.2 கோடி மதிப்பிலான 42 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் சுமார் ரூ.9.15 கோடி மதிப்பிலான 1.18 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



மேலும், இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்கப்படும்.'' என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...