காஷ்மீரில் நீடிக்கும் துப்பாக்கிச் சண்டை: எல்லையில் 300 தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லையில் ஊடுருவ 300 தீவிரவாதிகள் காத்திருப்பதால் எல்லையில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதில் பாகிஸ்தான் வீரர்களும் கொல்லப்பட்டனர். இதே வேலையில் பூஞ்ச் வட்டாரத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்  முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். 

இதை தொடர்ந்து ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பாட்டார். இந்நிலையில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ 250 முதல் 300 தீவிரவாதிகள் முயன்றதாக காஷ்மீர் காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு வசதியாக இந்திய படையினரை திசை திருப்பவே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே காஷ்மீரில் மர்மநபர்களால் பள்ளிகளுக்கு தீ வைக்கப்படுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...