கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று உள்ளது. இதில், ஸ்ரீ வைகுண்டம் என்பவர் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு, வழக்கம் போல் ஆலையின் கதவை அடைத்துவிட்டு, பாதுகாவலர் அறையில் உறங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் ஆலையின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் உள்ள இருந்த 2 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து நூற்பாலையின் உரிமையாளர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த கருமத்தம்பட்டி போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.