எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர் மனமுடைந்து தற்கொலை


கோவை அருகே உள்ள இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் சௌந்தரராஜன் (28). அப்பகுதியில் உள்ள மில் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு எச்ஐவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவை அரசு பொது மருத்துவமனையில் சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி முதல் அவர் காணாமல் போயுள்ளார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே ஞாயிறன்று சூலூர் அருகே உள்ள கல்லுக்குழியின் அருகே இவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். அப்போது கல்லுக்குழியில் விழுந்து சௌந்தரராஜன் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சூலூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...