மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாளான இன்று...


கணவர் இறந்ததற்கான குடும்ப நிதி வழங்கக் கோரி முதாட்டி மனு

கோவை மாவட்டம், மதுக்கரை அடுத்த செட்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மா (எ) ரமலத். இவர் திங்களன்று (இன்று) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் பிரிவில் மனு அளித்தார். அம்மனுவில், கூறியிருப்பதாவது:-



என் கணவர் குன்னிமுகமது இறந்த பின் குடும்ப நிதிக்காக மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் அதனை என் கணவரது முதல் மனைவி கைப்பற்றிக்கொண்டார். எனக்குரிய பணம் வேண்டி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளேன். தமிழக முதல்வரிடமும் மனு அளித்து அவர் எனக்கு சேர வேண்டிய நிதியை வழங்கக்கோரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் இதற்காக விண்ணப்பித்து வரும் எனக்கு தற்போது வரை எவ்வித நிதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் வெளியில் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் முன்பு விழுந்து கண்ணம்மா தற்கொலையில் ஈடுபட்டார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரை மீட்டு எச்சரிக்கை விடுத்து அனுப்பிவைத்தனர்.



பச்சிளங் குழந்தையுடன் மனு கொடுக்க வந்த பெண்மணி

குழந்தை பெற்று 50 நாட்களே ஆனா பெண்ணை சட்ட விரோதமாக சிறைபிடித்ததையும், கணவரை பொய் புகாரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பச்சிளங் குழந்தை உடன் பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்துள்ளார். 



காந்திபார்க், ஆர்.எஸ் புரம் பகுதியில் வசித்து வருபவர் ஜோதிமணி இவருக்கு குழந்தை பிறந்து 50 நாட்கள் ஆகிறது. இவருடைய கணவர் விஷ்ணு ஜெயராம் இவரைத்தேடி, கடந்த 14.10.2016 அன்று கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் உள்ள மங்கையர்கரசி, பிந்து என்ற இரண்டு பெண் காவலர் விஷ்ணு ஜெயராம் எங்கே என கேட்டு அவரது மனைவியை மிரட்டி உள்ளதாகவும், மேலும் அவரை அவரது அக்கா வீட்டிலேயே சட்டவிரோதமாக 6 நாட்கள் சிறை பிடித்து வைத்ததாகவும், அன்னூரில் உள்ள இவரது வீட்டில் இருந்து டிவி, வாஷிங் மிசின் ஆகியவற்றை காவல்துறையினர் எடுத்து சென்றதாகவும் அந்த பெண்மணி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...