கோவை அறம் அறக்கட்டளை மற்றும் நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை இணைந்து அரசுப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி மற்றும் வினா விடை வங்கி புத்தகம் இலவசமாக 1700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 730 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் சிறப்பு ஆசிரியர் குழுவினைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்துப் பாடப்பரிவுக்கான முழுமையான வழிகாட்டி மற்றும் 70 மாதிரி வினாக்கள் இடம் பெற்றுள்ளன.

கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குற்றவியல் அரசு வழக்கறிஞர் கே.ஆறுமுகம், கிக்கானி கல்விக் குழும தாளாளர் துசார் ஆர்.கிக்கானி, வழக்கறிஞர் கூட்டுறவு சேவா சங்க தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் அகஸ்டஸ், நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.என்.பத்மநாபன், கோவை அறம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரகுராமன், தன்னம்பிக்கை மற்றும் நினைவாற்றல் பயிற்சியாளர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
