கோவை அறம் அறக்கட்டளை மற்றும் நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை சார்பில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகம்


கோவை அறம் அறக்கட்டளை மற்றும் நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை இணைந்து அரசுப் பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி மற்றும் வினா விடை வங்கி புத்தகம் இலவசமாக 1700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. 730 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் சிறப்பு ஆசிரியர் குழுவினைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், அனைத்துப் பாடப்பரிவுக்கான முழுமையான வழிகாட்டி மற்றும் 70 மாதிரி வினாக்கள் இடம் பெற்றுள்ளன. 



கிக்கானி மேல்நிலைப்பள்ளி, சரோஜினி நடராஜ் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குற்றவியல் அரசு வழக்கறிஞர் கே.ஆறுமுகம், கிக்கானி கல்விக் குழும தாளாளர் துசார் ஆர்.கிக்கானி, வழக்கறிஞர் கூட்டுறவு சேவா சங்க தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், கூடுதல் அரசு வழக்கறிஞர் அகஸ்டஸ், நடராஜ் ஸ்ரீசரோஜினி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.என்.பத்மநாபன், கோவை அறம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரகுராமன், தன்னம்பிக்கை மற்றும் நினைவாற்றல் பயிற்சியாளர் ஆர்.விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...