டெல்லியில் ஏற்பட்டுள்ள மாசு பிரச்சினையை கண்காணிக்க கோரி மனு: நாளை விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்டு

டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கண்காணிக்க கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் கடந்த ஒரு வாரமாக காற்றில் மாசு அதிகரித்து உள்ளது. விடிந்து பகல் பொழுது வந்த பின்னரும் காற்றில் மாசு காணப்படுவதால் டெல்லி நகர மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளும், வயதானோரும் மூச்சு விட சிரமப்படுகின்றனர். கண் எரிச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள். இதனால் பகல் நேரத்தில் டெல்லியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. மக்கள் சுவாச கவசம் அணிந்து நடமாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். காற்று மாசு அபாய கட்டத்தில் இருப்பதால், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு அமைப்பின் ((Prevention and Control) Authority (EPCA) சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் டெல்லி மற்றும் அண்டை நகரங்களில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை கண்காணிக்கவும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது.  இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ் தாகூர் மற்றும் நீதிபதிகள் டி ஒய் சந்திரசவுத், எல். நாகேஷ்வர் ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை பிற்பகல் 3.30 மணியளவில் மனுவை விசாரிப்பதாக கூறியது. 

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டுவதை அடுத்து பல்வேறு உத்தரவுகளை  சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்து இருந்தது. டீசலில் இயங்கும் எஸ் யூவி கார்களை பதிவு செய்யக்கூடாது. 2 ஆயிரம் சிசிக்கும் அதிகமாக திறன் கொண்ட கார்களை அனுமதிக்க கூடாது போன்ற பல்வேறு உத்தரவுகள் அதில் அடங்கும். இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய கார் உற்பத்தி சங்கம் மற்றும் பிற அமைப்புகள் அளித்த பிரமாணப்பத்திரத்தை அடுத்து கூடுதலாக ஒரு சத வீத வரியுடன் 2 ஆயிரம் சிசிக்கு அதிகமான திறன் கொண்ட கார்கள் விற்பனைக்கு அனுமதி அளித்தது நினைவிருக்கலாம்

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...