இன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.. கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக நியூ ஃபாக்ஸ் நியூஸ் சானல் நடத்திய கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவில் 45வது அதிபர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு வெளியான கருத்துக்கணிப்பில் ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதாக கூறப்பட்டிருந்தது. பல்வேறு ஊடகங்கள் நவம்பர் 2ம்தேதி வரை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தொடர்ந்து ஹிலாரியே முன்னிலை பெற்றுள்ளார் என்று கூறியது. பிபிசி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 48 சதவீத வாக்குகளுடன் ஹிலாரி முன்னிலை பெற்றிருந்தார். டிரப்புக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அதிபர் தேர்தல் தொடர்பாக நியூ ஃபாக்ஸ் நியூஸ் சானல் நடத்திய கருத்துக்கணிப்பு நேற்று வெளியாகியது. இதில் ஹிலாரிக்கு 48 சதவீதம், டிரம்பிற்கு 44 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...