மருதமலை அருகே சிலகாலமாக சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சுற்றித்திரிவதாக வனத்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். அதனடிப்படையில், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட வனத்துறை அதிகாரிகள், அங்கு சிறுத்தையின் காலடித் தடத்தை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நீர்குட்டை ஒன்றின் அருகே கண்காணிப்பு கேமிராவும், கூண்டும் பொருத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று இரு சிறுத்தைகள் இறந்த விலங்கின் உடலை இழுத்துச் செல்லும் காட்சி அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் அந்த சிறுத்தைகளை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
.jpg)
பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் மருதமலை பகுதியில் சிறுத்தைகள் சுற்றிவருவது அப்பகுதி மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)
இந்நிலையில், நேற்று இரு சிறுத்தைகள் இறந்த விலங்கின் உடலை இழுத்துச் செல்லும் காட்சி அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர் அந்த சிறுத்தைகளை பிடிக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
.jpg)
பொதுமக்கள் அதிகளவில் வந்துசெல்லும் மருதமலை பகுதியில் சிறுத்தைகள் சுற்றிவருவது அப்பகுதி மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)