இந்திய விமானப் படையின் சார்பில் இந்துஸ்தான் கல்லூரியில் கண்காட்சி நிகழ்ச்சி


இந்திய விமானப் படையின் சார்பல் "தி கார்டியன்ஸ் ஆப் தி ஸ்கை" என்ற கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், இந்திய விமானப் படையில் ஆட்கள் தேர்வு முறை, அதில் சேர்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மண்டலம், அனுபவம் மற்றும் தகவல் மண்டலம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து விங் கமேண்டர் சங்கீதா நமது நிருபரிடம் கூறியதாவது:-

இந்நிகழ்ச்சி நடத்தியதற்கான முக்கிய நோக்கம் மாணவ, மாணவிகளிடையே இந்திய விமானப்படையின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டவும், ஊக்குவிப்பதுமாகும். இதுகுறித்த முழுமையான விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பினரிடமும் இதனைக் கொண்டுசேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.



இதைத்தொடர்ந்து, மாணவர்கள், விமானப் படையில் சேர்வதற்கான தேர்வு முறைகள், தகுதி, விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். பின், இந்திய விமானப் படையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை அடங்கிய பேருந்தினை பார்வையிட்டனர். இதில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கருவி, உபகரணம், மேற்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் கண்காட்சிப் படுத்தப்பட்டன.படுத்தப்பட்டன. 



இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்திய விமானப் படையின் கண்காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன் மூலம் விமானப் படையில் சேர்வதற்கான ஊக்கம் ஏற்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விமானக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்கியது நல்ல அனுபவத்தை ஏற்படுத்தியது என்றனர்.



இந்நிகழ்ச்சியில், விமானப்படை நிர்வாகக் கல்லூரி ஏர் விங் கமேன்டர் பி.கனேசன், அணித் தலைவர் கல்பனா குமாரி, பெங்களுரில் இருந்து அணித் தலைவர் நிசாந்த் தீக்சித், விமானப்படை நிர்வாகக் கல்லூரி இளைஞர் வாரண்ட் அதிகாரி சாகு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...