மின்வாரிய ஓய்வு பெற்றோர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாண தர்ணா போராட்டம்

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மின்வாரிய ஓய்வு பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் இன்று காலை கோவை டாடாபாத் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் எதிரில் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். 



போராட்டத்தில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர் அதில், ஓய்வூதியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில் காலநிலை பேச்சுவார்த்தை நடத்தவும், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஒப்பந்தம் மற்றும் சொசைட்டி பணிக்காலத்தையும் கணக்கில் கொண்டு ஓய்வூதியம் வழங்கவும், மருத்துவ வசதிகளில் குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவ உதவி திட்டத்தில் சேர மீண்டும் அவகாசம் வழங்கவும். சொந்த பணி விடுவிப்பு - நிலவைத் தொகையில் 15 ஆயிரம் பேர்களுக்கு பணப்பயன்கள் கிடைக்கவில்லை அவர்களுக்கு முழுத்தொகையும் வழங்கப்படவும், காலி பணியிடங்களை நிரப்பவும், ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை சட்டம் 1972ன் படி, பணிக்கொடையினை கணக்கிட்டு நிலுவைத்தொகையினை வழங்கவும், குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாளுக்கு பிறகு அவர்களது குடும்பத்தில் வருமானம் ஈட்ட முடியாத மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதியம்  வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இதில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் செயலாளர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர் ராமச்சந்திரன், உதவித் தலைவர்கள் நாச்சிமுத்து, சுப்பிரமணியன், ஆறுமுகம் மற்றும் 150 மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...