மொசூலில் தலை துண்டிக்கப்பட்ட 100 உடல்கள் கண்டுபிடிப்பு

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் பகுதியை முற்றிலும் கைப்பற்ற ஈராக் ராணுவமும், குர்து படைகளும் தீவிரமாக உள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து மொசூலின் பெரும்பாலான பகுதிகள் ஈராக் ராணுவத்தின் வசம் வந்து விட்டன. இருந்தாலும் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மொசூலில் இருந்து 15 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ஹம்மாம் அல்-அலில் நகரத்தின் விவசாய கல்லூரியின் வெளியே ஒரே இடத்தில் குவியலாக பிணம் புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

எனவே, ராணுவத்தினர் அந்த இடத்தை தோண்டிப் பார்த்தனர். அப்போது அங்கு 100 பேரின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன.

மொசூல் மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். தற்போது அங்கு தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் நிலையில் அங்கிருந்து தப்பி ஓடிய பொதுமக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொடூரமாக கொன்று புதைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கிடையே, மொசூல் பகுதியில் பாஷிகா நகரம் மற்றும் 5 கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளை ஈராக் மற்றும் குர்து கூட்டு ராணுவம் மீட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...