ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் சார்பில் கோவை மாவட்டத்தில்
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்பட்டது. கடந்த அக்டோபர் 31ம்
தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை கோவை விமான நிலையத்தில் கடைபிடிக்கப்பட்ட
இந்த விழாவில் கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் சிறப்பு
விருந்தினராக பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில், லஞ்ச ஒழிப்பை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவையில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா, சுகுனா பிப் பள்ளி, கே.சி.டி, ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பெருந்திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பரிசுகள் வழங்கும் விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இதனிடையே, மாணவ, மாணவிகள் ஓவியப் போட்டியில் பங்கேற்றபோது வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை, கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் ஜி.பிரகாஷ் ரெட்டி, ஜெஜிஎம் (ஏடிஎம்) வி.பிரதீப் குமார், டிஜிஎம் (சிவில்) ஆர்.குல்ஸ்ரெஸ்தா உள்ளிட்ட அனைத்துறை தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், லஞ்ச ஒழிப்பை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கோவையில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா, சுகுனா பிப் பள்ளி, கே.சி.டி, ஜிஆர்டி கலை அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து பெருந்திரளான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் விமான நிலைய ஊழியர்களும் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற பரிசுகள் வழங்கும் விழாவில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இதனிடையே, மாணவ, மாணவிகள் ஓவியப் போட்டியில் பங்கேற்றபோது வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை, கோவை மாவட்ட துணை காவல் ஆணையர் கே.சுந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், விமான நிலைய இயக்குநர் ஜி.பிரகாஷ் ரெட்டி, ஜெஜிஎம் (ஏடிஎம்) வி.பிரதீப் குமார், டிஜிஎம் (சிவில்) ஆர்.குல்ஸ்ரெஸ்தா உள்ளிட்ட அனைத்துறை தலைவர்களும் பங்கேற்றனர்.