கோவை தனியார் ஹோட்டல் அரங்கில் திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் தா.ம.க நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் இன்று மாலை திமுகவில் இணைந்தனர்.
திமுக பொருளாளர் ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் நடந்த சிறிய விழாவில் அவர் கலந்து கொண்டார்.தா.ம.கவில் இருந்து விலகிய அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் 40 பேர் திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்.அவர்களை ஸ்டாலின் கைகுலுக்கி வரவேற்றார். நாளை காலை திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்கும் ஸ்டாலின் பின்னர் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள இரத்த வங்கியை திறந்து வைக்கின்றார்.பின்னர் கோவையை அடுத்த காரமடை பகுதியில் புறநகர் மாவட்ட திமுக ஏற்பாடு செய்துள்ள விழாவில் ஸ்டாலின் பங்கேற்கின்றார். இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திமுகவில் இணையவுள்ளனர்.