கேஎம்சிஎச் சிட்டி சென்டர் நடத்தும் இலவச ஆக்குபேஷனல் தெரபி மற்றும் மருத்துவ ஆலோசனை முகாம்


கேஎம்சிஎச்-யின் ஒரு சிறப்பு பிரிவான ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சை துறையின் சார்பாக உலக ஆக்குபேஷனல் தெரபி தினத்தை முன்னிட்டு இலவச ஆக்குபேஷனல் தெரபி முகாம் நடத்தப்பட உள்ளது.

வரும் நவம்பர் மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் கேஎம்சிஎச் சிட்டி சென்டர், ராம் நகரில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த இலவச முகாமில் கேஎம்சிஎச் ஆக்குபேஷனல் தெரபி துறையின் அனுபவமிக்க மருத்துவர்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. 

ஆக்குபேஷனல் தெரபி துறையானது உடல், மூளை மற்றும் மன வளர்ச்சி தொடர்புடைய பாதிப்புகளான கற்றலில் ஏற்படும் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைவளக்கேடு, கை, கால் வலிப்பு நோய், மனவளர்ச்சி குறைபாடு மற்றும் மனநலிவு நோய் போன்ற பாதிப்புகளால் சிரமப்படும் குழந்தைகள் முதல், மூளை, தண்டுவட முடக்கு நோய், பக்கவாதம், தலைக் காயம், பார்கின்சன் நோய், கை, கால் நரம்பு பாதிப்பு, டிமென்ஷியா என்ற மறதிநோய் பாதிப்புகளாலும், மனநோய்களால் அவதிப்படும் பெரியவர்கள் வரை மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சிறப்பு பெற்ற துறை ஆகும். 

எனவே குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் இந்த இலவச ஆக்குபேஷனல் தெரபி மருத்துவ ஆலோசனை முகாமில் பங்கு பெற்று பயனடைந்துகொள்ளலாம் என கேஎம்சிஎச் மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...