கேஎம்சிஎச்-யின் ஒரு சிறப்பு பிரிவான ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சை துறையின் சார்பாக உலக ஆக்குபேஷனல் தெரபி தினத்தை முன்னிட்டு இலவச ஆக்குபேஷனல் தெரபி முகாம் நடத்தப்பட உள்ளது.
வரும் நவம்பர் மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் கேஎம்சிஎச் சிட்டி சென்டர், ராம் நகரில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த இலவச முகாமில் கேஎம்சிஎச் ஆக்குபேஷனல் தெரபி துறையின் அனுபவமிக்க மருத்துவர்களால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
ஆக்குபேஷனல் தெரபி துறையானது உடல், மூளை மற்றும் மன வளர்ச்சி தொடர்புடைய பாதிப்புகளான கற்றலில் ஏற்படும் குறைபாடு, மூளை முடக்குவாதம், தசைவளக்கேடு, கை, கால் வலிப்பு நோய், மனவளர்ச்சி குறைபாடு மற்றும் மனநலிவு நோய் போன்ற பாதிப்புகளால் சிரமப்படும் குழந்தைகள் முதல், மூளை, தண்டுவட முடக்கு நோய், பக்கவாதம், தலைக் காயம், பார்கின்சன் நோய், கை, கால் நரம்பு பாதிப்பு, டிமென்ஷியா என்ற மறதிநோய் பாதிப்புகளாலும், மனநோய்களால் அவதிப்படும் பெரியவர்கள் வரை மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை அளிக்கும் சிறப்பு பெற்ற துறை ஆகும்.
எனவே குழந்தைகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்கள் இந்த இலவச ஆக்குபேஷனல் தெரபி மருத்துவ ஆலோசனை முகாமில் பங்கு பெற்று பயனடைந்துகொள்ளலாம் என கேஎம்சிஎச் மருத்துவமனையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.