மாணவர்களை மின் ஆற்றல் சேமிப்புத் தூதுவர்களாக உருவாக்கும் பயற்சி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி மற்றும் எஸ்என்எஸ் இராஜலட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து மாணவ, மாணவிகளை மின் ஆற்றல் சேமிப்புத் தூதுவர்களாக உருவாக்கும் பயிற்சியின் துவக்க விழா புதனன்று (இன்று) நடைபெற்றது. எஸ்என்எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் மின் சிக்கனத்தை வலியுறுத்தும் பொருட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இவ்விழாவினை கோவை மாவட்ட மின் பகிர்மான வட்ட தலைமைப் பொறியாளர் டி.ஆல்தொரை தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி முன்னாள் தலைவர் எம்.முருகன் சிறப்புரையாற்றினார். 

இதுகுறித்து, தலைமைப் பொறியாளர் டி.ஆல்தொரை நமது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

''கோவை மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திரட்டி மின் சிக்கனத்தை வலியுறுத்தி மின் ஆற்றல் சேமிப்புத் தூதுவர்களாக உருவாக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 100 மாணவர்கள் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், தனி நபர் ஒருவர் ஒருநாளுக்கு 1 யூனிட் மின்சாரம் சேமிப்பதன் மூலம், 1 லட்சம் மக்கள் சுமார் 1 லட்சம் யூனிட் மின்சாரத்தினை ஒரே நாளில் சேமிக்கலாம். இதற்காகவே, தற்போது கோவையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. நாளை கற்பகம் பல்கலைக் கழகத்தில் மின் சிக்கனத்தை வலியுறுத்தி இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பல லட்சம் யூனிட் மின்சாரம் மக்களால் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என்றார்.



இதில், கோவை மாவட்ட மின் பகிர்மான வட்ட வடமதுரை செயற்பொறியாளர் ஆர்.நந்தகோபால், கோவை வடக்கு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜி.என்.சுதாகர், மின்னியல் செயற்பொறியாளர் கே.விஜயகௌரி, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் சி.லோகாம்பாள், சீராநாய்க்கன்பாளைய மின் செயற்பொறியாளர் ஆர்.சுப்பிரமணியம், ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி திட்டத்தலைவர் ச.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் வீ.சிவகாமி, மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் ஜெய் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...