தேசிய விருதுபெரும் பத்திரிகையாளர் செல்வகுமாருக்கு பாராட்டு விழா

சிறப்பான கட்டுரைகள் எழுதும் செய்தியாளர்களுக்கு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா சார்பில் ஆண்டு தோறும் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தினமலர் கோவை பதிப்பின் முதன்மை நிருபர் செல்வகுமார் எழுதிய ‘ஒரு நதியைத் தேடி’ என்னும் தொடர் கட்டுரையைப் பாராட்டி வரும் 16ம் தேதியன்று தில்லியில் அவருக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது.



இதற்காக தற்போது ஒட்டுமொத்த தமிழக ஊடகத்துறையும் செல்வகுமாரைக் கொண்டாடி வருகின்றது. அதன் ஒருபகுதியாக, கோவை பத்திரிகையாளர்கள் இணைந்து தேசிய விருதுபெற உள்ள செல்வகுமார்-க்கு, ரயில் நிலையம் அருகே உள்ள மண்டபம் ஒன்றில் பாராட்டு விழா நடத்தினர். இதில் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு செல்வகுமாரை வாழ்த்திப் பேசினர்.

இதைத்தொடர்ந்து, இவ்விழாவில் செல்வகுமார் பேசுகையில், ''காமராஜர் காலத்தில் தொழில்நுட்பம் அதிகமாக இல்லை, ஆனால் பரம்பிக்குளம் உள்ளிட்ட பல அணைகளை கட்டினார். இது மிகவும் பிரம்மிக்கத்தக்கது. இதை அடிப்படையாகக் கொண்டு நீர்பாசன முறையை மேம்படுத்த பல தொடர் கட்டுரைகளை எழுதினோம். மரக்கடத்தல், சூழல் குறித்த கட்டுரைகள் எழுதும் போது மிரட்டல்கள் வந்தன. அவற்றைக் கடந்து செய்திகள் வெளியிட்டோம். அதன் எதிரொளியாக பலர் கைது செய்யப்பட்டனர். இதை நான் தான் செய்யமுடியும் என்பது இல்லை. செய்தியாளர்கள் அனைவரும் செய்யமுடியும். நம்மால் முடியாது என்ற எண்ணத்தை கைவிடுங்கள். இந்த விருதுக்காக என்னை கவுரவித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து நான் உங்களோடு பயனிக்க வேண்டும்'' என அவர் பேசினார்.



இதனைத்தொடர்ந்து, இளம் பத்திரிகையாளர்கள் அவருக்கு நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...