ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படங்கள் இடம்பெற வேண்டும் - இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்


பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை நிகழ்த்திய உரையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் வங்கிகளில் சென்று பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்குமாறும் தெரிவித்தார்.



பிரதமரின் இந்த திட்டத்தை வரவேற்கும் வகையில் கோவையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து அக்கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளார். தமிழக மக்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏழை மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சாகும் கள்ள நோட்டுகளையும், இந்தியாவில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும் மீட்கும் முயற்சி. மோடி அரசின் இந்த முயற்சி மூலம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதை விரும்பாத சக்திகள் பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் சுண்டல் மடிப்பத் போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இது அரசை அவமதிக்கும் செயல். அனைவரும் இத்திட்டத்தை வரவேற்போம். சிரமங்களை மக்கள் பொறுத்துக்கொண்டு எல்லோரும் இணைந்து அரசை வலுப்படுத்துவோம்.



இந்தியாவின் அனைத்து தேசிய தலைவர்களின் புகைப்படமும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெற வேண்டும். லட்சுமி,விநாயகர் போன்ற கடவுள்களில் படமும் இடம்பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...