செனட் சபை- பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு: அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி

அமெரிக்காவில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவை உள்ளன. இதில், செனட் சபை உறுப்பினர்கள் நம்ம ஊர் மேல்-சபை எம்.பி. போலவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மக்களவை எம்.பி. போலவும் செயல்படுவார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலுடன் ஒரு சில செனட்சபை, பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர்.

செனட் சபைக்கு கமலா ஹாரிசும், பிரதிநிதிகள் சபைக்கு ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகன்னா, அமிபேரா, பிரமிளா ஜெயபால் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இதில், செனட் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வக்கீல் கமலா ஹாரிஸ் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர், சென்னையை சேர்ந்தவர். இவரது தாயார் டாக்டர் சியாமளா கோபாலன். புற்றுநோய் நிபுணர் ஆவார். 1960-ம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஜமைக்காவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.

அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து ராஜா கிருஷ்ணமூர்த்தி பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் ஆவார். அவர், குடும்பத்தினர் முதலில் டெல்லியில் வசித்து வந்தனர். ராஜா கிருஷ்ண மூர்த்திக்கு 3 வயது இருக்கும் போது, அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு சட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு ஆகியவற்றை படித்துள்ள அவர், தொழில் அதிபராகவும் இருந்து வந்தார். அரசியலில் ஈடுபட்டு இப்போது பிரதிநிதிகள் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...