கோவை சாயிபாபா காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (35). இவர் நேற்று இரவு மது அருந்திவிட்டு தனது வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் சண்டையிட்டார். மேலும், அவர்களை தகாத வார்த்தையில் பேசினார். இது குறித்து தகவல் அறிந்த சாயிபாபா காலனி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் சண்முக சுந்தரம் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், காவலரை மிரட்டியதோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.