பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி சாலைகள் பழுது சரி செய்த சில மாதங்களில் மீண்டும் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதமாக ஒருங்கிணைந்த முறையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து பி.எஸ்என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று (இன்று) நடைபெற்றது. 

இதுகுறித்து க.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் சாலைகள் பழுது சரி செய்த சில மாதங்களில் பி.எஸ்என்.எல் துறையின் மூலம் கண்ணாடி இறைவடம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் மூலம் மின்சார வடங்கள் பூமிக்கடியில் கொண்டு செல்வதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு ஒருங்கிணைந்து சில சமயங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தவிர்த்திடும் வகையில் ஒருங்கிணைந்த முறையில் பணிகளை செய்து முடிப்பது குறித்து பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

மேலும், மாநகராட்சியில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள், பணிகள் குறித்த விவரங்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தெரிந்துகொண்டு பி.எஸ்என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணிகள் அட்டவணைப் படுத்தப்பட்டு மாநகராட்சி அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு ஒருங்கிணைந்த முறையில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எந்தவித பழுதும் இல்லாமல் சாலைகள் பராமரிக்கப்படும்''. 

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், துணை ஆணையர் ப.காந்திமதி, நகரப் பொறியாளர் ராஜேந்திரன், பி.எஸ்என்.எல் கோட்டப்பொறியாளர் கொளஞ்சி, தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...