சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கடைபிடிக்கப்படும் சில முறைகள் குறிப்பிட்ட சாரர்களுக்கு எதிரானது அல்ல எனவும், அந்த வழிமுறையை மீற அப்பகுதி பெண்களிடம் கருத்து கேட்க வேண்டுமெனவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் இணையதளம் மற்றும் வேலை வாய்ப்பு பதிவு மையத்தை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், வழிபாட்டு உரிமை அனைவருக்கும் உண்டு என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது என தெரிவித்தார். ஆனால் சில வழிப்பாட்டு தளங்களில் கடைபிடிக்கப்படும் சில முறைகள் குறிப்பிட்ட சாரர்களுக்கு எதிரானது அல்ல எனவும், அனைத்து தரப்பு மக்களுக்கான வசதியாக இருக்க வேண்டுமென்ற வழிமுறை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த வழிமுறையை மீற அப்பகுதி பெண்களிடம் கருத்து கேட்க வேண்டுமென என கூறிய அவர், அப்படி கேட்கப்படாமல் கேரள அரசு திடீர் முடிவு எடுப்பது எந்த வகையில் பொருந்தும் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது விரும்பதகாதது என கூறிய அவர், மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே விவசாயிகள் பிரச்சணைகளுக்கு தீர்வு காண முடியுமென தெரிவித்தார்.
பொது சிவில் சட்டம் மதம் சார்ந்த கருத்து அல்ல எனவும், அனைத்து பெண்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டுமென்பதே பாஜகவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார். எல்லா துறைகளிலும் தோல்வியடைந்து மக்கள் செல்வாக்கை இழந்த கர்நாடக காங்கிரஸ் அரசு, காவிரி பிரச்சணையை அரசியலாக்கி இருப்பதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சணை ஏற்பட்டு கர்நாடக அரசு கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தலை சந்தித்து ஆட்சி பிடிக்க முயல்வதாக பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.