பழைய ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை வங்கிகளில் இன்று மாற்றிக் கொள்ளலாம்..!

சென்னை: ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, ஒருநாள் விடுமுறைக்குப் பின் இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்படுகின்றன. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதும் என்ற காரணத்தால் வங்கிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த ஒருநாள் விடுமுறையில், பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை மக்கள் மாற்றிக் கொள்ள வசதியாக வங்கிகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்தன. பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் சிறப்புக் கவுன்ட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் வங்கிகள் திறக்கப்பட உள்ளன. மக்கள் தங்களிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து விட்டு சிறப்பு கவுண்டர்களில் இன்று புதிய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சிறப்புக் கவுன்ட்டர் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு படிவத்தை பூர்த்தி செய்து நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.4,000 வரை பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் மக்கள் மாற்றிக் கொள்ளலாம். அனைத்து வங்கிக் கிளைகளிலும் இந்த சிறப்புப் படிவம் இலவசமாக அளிக்கப்படும்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு:

ஏடிஎம் மையங்கள் இன்றும் விடுமுறை என்பதால், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், புதிதாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். சுமார் 3 ஆயிரம் போலீசார் சென்னையில் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...