ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த இந்து மக்கள் கட்சி தலைவர் மீது வழக்கு

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மீது 2 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தற்கு வரவேற்பு தெரிவித்து புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையிலான அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், அனுமதியின்றி பட்டாசு வெடித்து கொண்டாடிய அர்ஜுன் சம்பத் உட்பட 6 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக  கையாளுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
இதனிடையே, இந்த வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக அர்ஜீன்சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...