ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜீன் சம்பத் மீது 2 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கருப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தற்கு வரவேற்பு தெரிவித்து புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையிலான அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், அனுமதியின்றி பட்டாசு வெடித்து கொண்டாடிய அர்ஜுன் சம்பத் உட்பட 6 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக அர்ஜீன்சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தற்கு வரவேற்பு தெரிவித்து புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜீன் சம்பத் தலைமையிலான அக்கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், அனுமதியின்றி பட்டாசு வெடித்து கொண்டாடிய அர்ஜுன் சம்பத் உட்பட 6 பேர் மீது, சட்ட விரோதமாக கூடுதல், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை அஜாக்கிரதையாக கையாளுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ள உள்ளதாக அர்ஜீன்சம்பத் கருத்து தெரிவித்துள்ளார்.